| இலங்கை சிறையில் உள்ள இந்திய கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது: எஸ். எம். கிருஸ்ணா |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:25 AM] |
இலங்கை சிறைகளில் இருந்து சுமார் 40க்கும் அதிகமான இந்திய கைதிகளை மீட்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
[மேலும்] |
| இலங்கைக்கு ஜி எஸ் பி பிளஸ் 2010 நடுப்பகுதி வரையில் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:20 AM] |
இலங்கைக்கு எதிர்வரும் 2010ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
[மேலும்]
|
| ஓசியானிக் வைக்கிங் பெண்கள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:15 AM] |
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு எதிராக, பெண்களையும், சிறுவர்களையும் நடமாட முடியாதபடி தற்காலிக தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த பெண்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். [மேலும்] |
| மீள்குடியேற்றலில் ஐக்கிய நாடுகளின் இலக்கு நிறைவேறவில்லை: ஜோன் ஹோம்ஸ் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:07 AM] |
வடக்கில் மீள் குடியேற்றம் முன்னெடுக்கப்படுகின்ற போதும், ஐக்கிய நாடுகள்சபையின் பிரதான இலக்கு இன்னும் நிறைவேறவில்லை என ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சரத் பொன்சேகாவின் எழுத்துமூல பதிலை எதிர்ப்பார்ப்பதாக மனோ கணேசன் தெரிவிப்பு |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:02 AM] |
தாம் எழுப்பிய கேள்விகள் தொடர்பில் சரத் பொன்சேகா எழுத்து மூலமான பதில்களை வழங்கும் வரையில், இது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ள போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல்: மத்திய மாகாண சபை பாடசாலைகள் மூடுவிழா |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:49 AM] |
பன்றிக் காய்ச்சல் பரவக் கூடும் என்ற அச்சம் காரணமாக மத்திய மாகாண சபையின் பாடசாலைகளை கால வரையறையின்றி மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய மாகாணசபை நிர்வாகம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
[மேலும்] |
| அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது: ஊடக அமைச்சர் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:45 AM] |
அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஊனமுற்ற படைவீரர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:42 AM] |
கொழும்பில், ஊனமுற்ற படைவீரா ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
[மேலும்] |
| எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதனை இன்னமும் தீர்மானிக்கவில்லை: அரசாங்கம் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:38 AM] |
எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென என்பதனை இன்னமும் தாம் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
[மேலும்] |
| சரத் பொன்சேகாவின் மனைவியும் பதவி விலகினார் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:34 AM] |
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| ஜனாதிபதி, கோத்தபாய, சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு களனி பல்கலைக்கழகம் கௌரவம் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:31 AM] |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு களனி பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டங்களை வழங் கௌரவிக்க உள்ளது.
[மேலும்] |
| அகற்றக் கூடிய உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 04:25 AM] |
அதி உயர் பாதுகாப்பு வலய கொள்கை தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, அகற்றப்படக் கூடிய உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
[மேலும்] |
| தமிழர்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும் நாடகம்: மங்கள எம்.பி. |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:20 AM] |
அப்பாவித் தமிழ் மக்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்து வைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளை கண்டால் வாரியணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார். இவ்வாறு நடந்துகொள்வதில் வெட்கமில்லையா? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம். பி. தெரிவித்தார்.
[மேலும்]
|
| போரில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழைப் பெறுவதில் உறவினர்கள் சிரமம் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 02:38 AM] |
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு மக்கள் பிரதேச செயலகங்களுக்கும், பதிவாளர் அலுவலகத்துக்கும் அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்கள் வீண் சிரமங்களுக்கு உள்ளாவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| இராணுவம் வழிகாட்டும் பயணம் என்பதால் முகாம்களுக்கு செல்லும் அழைப்பை நிராகரித்தேன்: சிவசக்தி ஆனந்தன் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 02:16 AM] |
இராணுவத்தினரின் வழிகாட்டுதலுடனான பயணம் என்பதால் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்குச் செல்வதற்கான அழைப்பைத் தான் நிராகரித்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| வாடகைக்கு வீடு தேடுகிறார் சரத் பொன்சேகா: உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் பெறுவதில் சிரமம் |
| [வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 02:02 AM] |
சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதால், மிகக் குறுகிய காலத்தில் பொருத்தமான வீடொன்றைப் பெறுவதில் அவர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
[மேலும்] |